இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் ஹெச். ராஜாவுக்கு சம்மன் அனுப்பினர்.
இந்த சம்மனை எதிர்த்து ஹெச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சம்மனை ரத்து செய்ய முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சம்மனை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
The post மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு எச். ராஜாவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.