திருப்பரங்குன்றம் ஸ்ரீவெய்யிலுகந்த அம்மன் கோயிலை புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை : ஒன்றிய அரசு

மதுரை : திருப்பரங்குன்றம் ஸ்ரீவெய்யிலுகந்த அம்மன் கோயிலை புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய தொல்லியல் துறை விதிகளின்படி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோயிலை புராதன சின்னமாக அறிவிக்கக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஒன்றிய அரசின் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

The post திருப்பரங்குன்றம் ஸ்ரீவெய்யிலுகந்த அம்மன் கோயிலை புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: