மே 10ம் தேதி மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் நாட்டின் கூட்டு உறுதியை காட்ட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதையும் பிரதமர் ஏற்கவில்லை.
தற்போது அவசரநிலை பிரகடனத்தின் 50வது ஆண்டின் நிறைவு நாளான ஜூன் 25-26ம் தேதிகளில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த ஒன்றிய அரசு பரிசீலிப்பதாக தெரிகிறது. நாடு தற்போது சந்திக்கும் பிரச்னைகளை விவாதிக்காமல் 50 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது என்பதை விவாதிக்க மோடி அரசு விரும்புகிறது. இது கடந்த 11 ஆண்டுகளாக அவசரநிலையின்கீழ் நாட்டை வைத்துள்ள ஒன்றிய பாஜ அரசின் பிரச்னைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் பிரதமர் மோடியின் முயற்சி.
பாகிஸ்தானையும், தீவிரவாதிகளையும் தாக்குவதற்கு பதிலாக காங்கிரசை குறி வைத்து தாக்குவதையே மோடி அரசு விரும்புகிறது” என குற்றம்சாட்டி உள்ளார்.
The post நெருக்கடி நிலை பிரகடனத்தின் 50 ஆண்டு தினத்தையொட்டி ஜூன் 25,26ல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்த ஒன்றிய அரசு திட்டம்: திசை திருப்பும் முயற்சி என காங். கடும் தாக்கு appeared first on Dinakaran.