போடி, மே 30:தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டி பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (42). இவர் இங்குள்ள கண்டியம்மன் கோயிலை சொந்தம் கொண்டாடி வந்துள்ளார். இதற்கு கணேசன், கூடலிங்கம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்களிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் கணேசன், கூடலிங்கம் உள்ளிட்டோர் ஆயுதங்களுடன் சுரேஷ் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் போடி தாலுகா போலீசார் கணேசன், கூடலிங்கம் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post விவசாயி மீது தாக்குதல் appeared first on Dinakaran.