இது தொடர்பாக ஒன்றிய அரசு அளித்த விளக்கத்தில், “கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு கற்பனை கதை. தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி ஆய்வறிக்கையில் சில திருத்தங்கள் செய்யும்படி மட்டுமே கோரினோம். இது தொடர்பாக ஆய்வாளருக்கு தொல்லியல் துறை இயக்குனர் கடிதம் எழுதினார். ஆனால், தொல்லியல்துறை இயக்குநர் அறிவுறுத்திய திருத்தங்களை ஆய்வாளர் இதுவரை செய்யவில்லை. கீழடி தொடர்பான செய்திகளை முழு ஆய்வுக்குப் பிறகு வெளியிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறோம். கீழடி விவகாரத்தில் ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தை மோசமாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் மறுப்பு appeared first on Dinakaran.