இதன்படி, நெல் பொது மற்றும் கிரேடு ஏ ரகத்திற்கு ரூ.69 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.2,369 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோளம் ஹைபிரிட் ரகம் ரூ.328 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.3,699 ஆகவும், நாட்டு சோளம் ரூ.328 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.3749 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு ரூ.450 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.8,000 ஆகவும், பாசிப்பருப்பு ரூ.86 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.8,768 ஆகவும் உளுந்து ரூ.400 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.7,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருத்தி நடுத்தர வகைகள் ரூ.589 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.7,710 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல, கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் மலிவு விலையில் வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான 1.5 சதவீத வட்டி மானியம் 202526ம் நிதியாண்டிலும் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தத் திட்டத்தை தொடர்வதால் ஒன்றிய அரசுக்கு ரூ.15,640 கோடி செலவாகும்.
The post 14 காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க அமைச்சரவை முடிவு: விவசாயிகளுக்கான வட்டி மானியம் நீட்டிப்பு appeared first on Dinakaran.