ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்; ஈரானில் 3 இந்தியர்களை கடத்தி சென்ற மர்ம கும்பல் : தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் ஆகிய 3 இளைஞர்களும் உள்ளூர் முகவர் ஒருவர் மூலமாக துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியா செல்ல இருந்தனர். ஈரானில் சென்றதும் அவர்களுக்கு அங்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். அங்கிருந்து ஆஸ்திரேலியா அனுப்பப்படுவார்கள் என முகவர் கூறியிருந்தார். அதன்படி மே 1ம் தேதி ஈரானின் டெஹ்ரானில் 3 இந்தியர்களும் சென்றடைந்ததும் மர்ம கும்பலால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்களை கடத்திய கும்பல், 3 பேரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். 3 பேரும் மஞ்சள் கயிற்றால் கட்டப்பட்டு கையில் ரத்தம் சொட்டும் வீடியோவையும் கடத்தல்காரர்கள் அனுப்பி உள்ளனர். பணம் தராவிட்டால் 3 பேரையும் கொன்று விடுவதாக கடத்தல்காரர்கள் கூறி உள்ளனர். கடந்த 11ம் தேதி வரை கடத்தல்காரர்கள் போன் மூலம் 3 இளைஞர்களும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசிய நிலையில் அதன் பிறகு எந்த அழைப்பும் வரவில்லை. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 3 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்; ஈரானில் 3 இந்தியர்களை கடத்தி சென்ற மர்ம கும்பல் : தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: