அவர்களை கடத்திய கும்பல், 3 பேரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். 3 பேரும் மஞ்சள் கயிற்றால் கட்டப்பட்டு கையில் ரத்தம் சொட்டும் வீடியோவையும் கடத்தல்காரர்கள் அனுப்பி உள்ளனர். பணம் தராவிட்டால் 3 பேரையும் கொன்று விடுவதாக கடத்தல்காரர்கள் கூறி உள்ளனர். கடந்த 11ம் தேதி வரை கடத்தல்காரர்கள் போன் மூலம் 3 இளைஞர்களும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசிய நிலையில் அதன் பிறகு எந்த அழைப்பும் வரவில்லை. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 3 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்; ஈரானில் 3 இந்தியர்களை கடத்தி சென்ற மர்ம கும்பல் : தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை appeared first on Dinakaran.