திருவண்ணாமலை, மே 28: அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்றும் திருவண்ணாமலையில் … டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. மேலும் அக்னி நட்சத்திரம் காலங்களில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோடைகாலம் தொடங்கிய நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.
இதனால் ஜூஸ் மற்றும் பழக்கடைகளில் மக்கள் அலைமோதினர். அதோடு இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனையும் களைகட்டியது. இந்நிலையில் கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகளவு இருக்கும் என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால், அவ்வப்போது கோடை மழை பெய்தது. இதனால் அக்னி நட்சத்திரம் காலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. நேற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் … டிகிரி அளவுக்கு மட்டுமே வெயில் பதிவானது.
அவ்வப்போது சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரத்தில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கையில் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.