ஜெயங்கொண்டம், மே 28: அரியலூர் வட்டம், ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி உத்தரவிட்டார்.
அரியலூர் வட்டத்திற்கான கடைசி நாளான ஜமாபந்தி ஏலாக்குறிச்சி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில், ஏலாக்குறிச்சி வருவாய் கிராமத்திற்குட்பட்ட கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு, பரப்பு திருத்தம், நத்தம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களின் மீது விரைவாக உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்குப் பதிவேடுகளை முறையாக பதிவு செய்து பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
The post ஜமாபந்தி மனுக்கள் மீது தீர்வு காண அரியலூர் கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.