சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள ஒத்திகை

 

தொண்டாமுத்தூர், மே 26: கோவை காருண்யா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜாதி, மத மோதல்கள் தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது. வெள்ளலூர் மத்திய சிஆர்பிஎப் விரைவு அதிரடி படை சார்பில் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜேஷ் பாபு மற்றும் அருண் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் 90 அதிகாரிகள் ஆளிநர்கள், ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டருடன் ஆலோசித்தனர். தொடர்ந்து முக்கிய நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்து (கியூஆர்சிஎஸ் ட்ரில்) ஒத்திகை நடத்தினர்.

The post சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள ஒத்திகை appeared first on Dinakaran.

Related Stories: