இதுகுறித்து சுகுமார், பழநி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், நாராயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் பைனான்ஸ் அதிபர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் என பணம் சரளமாக புழங்கும் நபர்களை குறிவைத்து, நட்புறவு ஏற்படுத்தி, ராணி சித்ராவை பழக வைத்து, மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராணி சித்ரா, நாராயணசாமி, துர்க்கைராஜை கைது செய்தனர். கைதான ராணி சித்ரா, பெண் போலீசாக பணியாற்றி ராஜினாமா செய்தவர் என்பதும், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், செல்போனில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களின் எண்களும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, போலீசார் பணம் பறிகொடுத்தவர்களிடம் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ்: ஆண் நண்பர்களுடன் கைது appeared first on Dinakaran.