வாஷிங்டன்: தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் சமீப காலமாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மைக்கேல் வாட்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்கோ ரூபியா தற்போது அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அமெரிக்காவே முதலில் என்ற தனது கொள்கைக்கு உடன்பட்டு வராதவர்களை கவுன்சிலில் நீக்க டிரம்ப் முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலர் கூறி உள்ளனர்.
The post டிரம்ப் அதிரடி தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்? appeared first on Dinakaran.