சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆறு வழி சாலையாக அகலப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேபோல், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.
முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் உள்ள தேர் செல்வதற்கான வழிகளையும், அங்கு மேற்கொள்ளப்பட உள்ள சாலை விரிவாக்கப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் 2 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்று வரும் பணிகளையும் ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், அறநிலையத்துறை ஆணையர் தர், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கிழக்கு கடற்கரை சாலையில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு appeared first on Dinakaran.