அமலாக்கத் துறை ஒரு வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால், அதற்கான மூல வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மட்டும்தான் விசாரிக்க முடியும். 50 ஆயிரம், 1 லட்சம் என கணக்கில் வராத பணம் வைத்திருந்தார்கள் என்ற வகையில் போடப்பட்ட மூல வழக்கை வைத்துக்கொண்டு அமலாக்கதுறை டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக ரெய்டு நடத்தி 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அரசியல்வாதிகள் போல அமலாக்கத் துறை அறிக்கை விடுவது சட்டத்திற்கு புறம்பானது.
அமலாக்கத் துறை நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள இந்த தீர்ப்பு, இந்தியா முழுமைக்குமான ஒரு தீர்ப்பாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். முதன்முறையாக உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறையைப் பார்த்து, மாநில சுயாட்சிக்கு எதிராக நீங்கள் நடக்கிறீர்கள் என கூறியுள்ளது. மேற்கு வங்கம், டெல்லி என எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுங்கட்சி நபர்கள் மீது ரெய்டு நடக்காமல், எதிர்கட்சிகள் மீது ரெய்டு நடத்தி, அவர்கள் பாஜவில் இணைந்த பிறகு புனிதர்கள் ஆக்கப்பட்டு, அமலாக்கத் துறையின் நடவடிக்கை கைவிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஈடி, ஐடி போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள்: திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி appeared first on Dinakaran.