24ம் தேதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க மக்கள் நேர்காணல் முகாம்: கலெக்டர் அழைப்பு

தஞ்சாவூர், மே 22: பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் \”மக்கள் நேர்காணல் முகாம்\” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்று வந்ததை தொடர்ந்து மக்கள் நேர்காணல் முகாம்\” தொடர்ந்து நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரும் 24ம் தேதி (சனிக்கிழமை) அன்று கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் சரகம், திருச்சேறை கிராமத்தில் \”மக்கள் நேர்காணல் முகாம்\” நடத்திட தஞ்சாவூர், மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி \”மக்கள் நேர்காணல் முகாம்\” பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு இதன்மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இன்று முதல் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுவதற்கு முன்னரே முன்மனுக்கள் பெறும்பொருட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருச்சேறை கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post 24ம் தேதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க மக்கள் நேர்காணல் முகாம்: கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: