வயதோ, வறுமையோ பொழைப்புதான் முக்கியம்; மேட்டூர் அணை தண்ணீர் திறப்பதால் தூர்வாரும் பணிகளை 31க்குள் முடிக்க வேண்டும்

தஞ்சாவூர், மே 22: தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை வருகிற 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக் காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடைமடை வரையிலும், அனைத்து பிரிவு நீர்நிலைகளிலும் தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடை பெற்று வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் என 1,379.18 கி.மீ தொலைவுக்கு ரூ.26.20 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் சுங்கான்திடல் அருகே வாழைப்பூ வடிகால் வாய்க்கால் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 6 கி.மீ.தூரம் உள்ள இந்த வாய்க்கால் எந்திரம் மூலம் தூர்வாரப்படுவதை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுப் பணி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு உதவி செயற் பொறியாளர்கள் சித்ரா, விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணியை விரைந்து தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும். தற்போது வரை 70 சதவீதம் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைந்து வருகிற 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றார்.

The post வயதோ, வறுமையோ பொழைப்புதான் முக்கியம்; மேட்டூர் அணை தண்ணீர் திறப்பதால் தூர்வாரும் பணிகளை 31க்குள் முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: