சென்னை : இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 93 பேருக்கு இருந்த தொற்று, நேற்று 257ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.