முட்டை விலை தொடர்ந்து உயர்வு: 570 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் நேற்று மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 570 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், நாமக்கல் மண்டலத்தில் கடந்த இரு வாரமாக தினமும் 5 காசுகள் வீதம் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. தொடர் முட்டை விலை உயர்வால் கோழிப்பண்னையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post முட்டை விலை தொடர்ந்து உயர்வு: 570 காசுகளாக நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: