மீண்டும் தங்கம் விலை புதிய உச்சம்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்வதுமான போக்கும் இருந்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக அதிரடியாக உயர்ந்து மீண்டும் பவுன் ரூ.73 ஆயிரத்தை நெருங்குவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,160க்கும் விற்பனையானது.

இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோருக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலை உயர்வு அதிர்ச்சியை நகை வாங்குவோர் தாங்குவதற்குள் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,800க்கு விற்பனையானது. 2 நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.1,240 உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவில் விலை உயர்ந்து தங்கம் சவரனுக்கு ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.9,295க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை பவுன் ரூ.74 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மீண்டும் தங்கம் விலை புதிய உச்சம்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Related Stories: