கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி கடத்தல்

கிருஷ்ணகிரி, மே 20: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள மாதரசனப்பள்ளியை சேர்ந்த 19 வயது இளம்பெண், பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ஓசூர் பத்தளப்பள்ளியில் காய்கறி கடை நடத்தி வரும் சக்திவேல் (22) என்பவர், எங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், ராயக்கோட்டை சூளக்குண்டா பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி, பிளஸ் 1 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில், ஓசூரை சேர்ந்த அசேன் என்பவருடன், சிறுமி அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். அவர் ஆசைவார்த்தை கூறி, சிறுமியை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: