குடியாத்தம், மே 20: குடியாத்தத்தில் தாய் இறந்த சோகத்தில் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி அம்முக்குட்டி(50). இவர்களது மகன் செல்வசூரியா(29). கார் டிரைவரான செல்வசூர்யாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் அம்முக்குட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். தாய் இறந்துவிட்டதால் செல்வசூரியா பெரும் சோகத்தில் இருந்துள்ளார். நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது ெசல்வசூரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த தகவலின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மகன் தூக்குப்போட்டு தற்கொலை தாய் இறந்த சோகத்தில் appeared first on Dinakaran.