வேலூர், மே 19: வேலூர் அடுத்த வல்லம் ஓட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(27), சென்னை ஒரகடத்தில் தனியார் கார் கம்பெனியில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்யும் இளம்பெண்ணுடன் மோகன்ராஜிக்கு காதல் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், உறவினர் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த மோகன்ராஜ், கடந்த 15ம் தேதி வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று அங்குள்ள கிணற்றில் மோகன்ராஜ் சடலமாக மிதப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் திருமணத்திற்கு வீட்டில் மறுப்பு தெரிவித்ததால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர்.
The post காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.