ஸ்பிக்நகர், மே 19: தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பாரதிநகர் 3வது தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சண்முகம் (46). இவர் முள்ளக்காட்டில் வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருவதாகவும், கடந்த 10 வருடத்திற்கு முன்பு முள்ளக்காடு பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும், இதில் அதிக பணத்தை சண்முகம் இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முள்ளக்காட்டைச் சேர்ந்த பொன்துரை மகன் பொன்குமார் (27) என்பவர் அதே பெண்ணிடம் பழகி வருவதாகவும், இதனை அறிந்த சண்முகம், பொன்குமாரை கண்டித்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகம் தள்ளி விட்டதில் பொன்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த மீராசா மகன் காசி மன்சூர் (32) என்பவர் சண்முகத்திற்கு போன் செய்துள்ளார். அப்போது, போனை எடுத்த சண்முகத்தின் மனைவி, தனது கணவரை காசி மன்சூர் மது குடிக்க அழைக்கிறார் என்று நினைத்து சத்தம் போட்டுள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு, பொன்குமாரும், காசி மன்சூரும் நேற்று முள்ளக்காடு பகுதியில் சண்முகம் டிஜிட்டல் பேனர் கட்டிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பொன்குமார் கையில் வைத்திருந்த அரிவாளால் சண்முகத்தின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. உடனிருந்த காசி மன்சூர், பொன்குமாரிடம் இருந்து அரிவாளை வாங்கி அதன் கைப்பிடியால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த சண்முகம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சண்முகத்தை தாக்கிய பொன்குமார் மற்றும் காசிமன்சூரை கைது செய்தனர். பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது சாத்தான்குளம், மே 19: சாத்தான்குளம் அருகே உள்ள பழங்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் எஸ்ஐ செல்வராஜ் தலைமையில் போலீசார் கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழங்குளம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வரும் அந்தோணி ஞானசேகர் என்பவர் கடையில் சோதனையிட்ட போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 15 பாக்கெட் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளரை கைது செய்தனர்.
The post தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.