இதுவரை இல்லாத தேர்ச்சி கல்வியில் சமூக நீதிக்கான வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: ஆதிதிராவிடர் – பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சம் அடைந்துள்ளதாகவும், கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 சதவிகிதத்தை அடைந்து புதிய சாதனை படைத்திருந்தது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட மாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இதுவரை இல்லாத தேர்ச்சி கல்வியில் சமூக நீதிக்கான வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: