அது யார் செய்தாலும் ஒருகால கட்டத்திற்குள் நின்று விடும். எத்தனை சினிமா ஸ்டார்கள் வந்தாலும் நமக்கு போட்டியாளர்களாக வரமுடியாது. நாம் வெளிப்படையாக சொல்கிறோம் பாஜ, பாமகவோடு உறவில்லை என்று. அந்த சமூகத்தோடு உறவில்லை என்று சொல்லவில்லை. வன்னியர் சமூகத்தோடு எங்களுக்கு உறவு உண்டு, நட்பு உண்டு, நல்லிணக்கம் உண்டு, நல்ல உறவு உண்டு. பாமக என்ற சாதியவாத கட்சியோடு உறவு வைத்து கொள்ளமாட்டோம். இந்தியாவில் தற்போது மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதை பாதுகாக்கவே மதச்சார்பின்மை காப்போம் பேரணியை நடத்தவுள்ளோம். குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் போன்றவற்றுக்கு எதிராக போராடி வருகிறோம். இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக நாம் பேரணியை நடத்தவில்லை. சிறுபான்மையினரின் பாதுகாப்பே நமது நிலைப்பாடாகும். தற்போது மதச்சார்பின்மைக்கு ஆதரவாக ஒரு தரப்பும், எதிராக ஒரு தரப்பும் அரசியல் பேசி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் அம்பேத்கரின் கொள்கை தெரியாது. அதற்காகத்தான் நாம் ஜனநாயக ரீதியாக போராடி வருகிறோம்.
ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் என்பதெல்லாம் மதச்சார்பின்மைக்கு, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சமூகநீதி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என எல்லாவற்றுக்கும் அரசமைப்பு சட்டம்தான் காரணம். அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கிறோம் என்று கூறிக் கொண்டு, அதை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் ேபசினார். இதில் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார் எம்.பி, சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர் பெரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சாதியவாத பாமக, பாஜவுடன் உறவில்லை வன்னியர் சமூகத்தோடு எங்களுக்கு நல்லுறவு: திருமாவளவன் பேச்சு; நடிகர் விஜய் மீதும் தாக்கு appeared first on Dinakaran.