உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கல்லாமொழியில் இரு அலகுகளை கொண்ட 800 மெகாவாட் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. முதல் யூனிட் பணிகள் நிறைவடைந்து சில வாரங்களாக சோதனை ஓட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் மின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் உடன்குடி அனல் மின் நிலையத்தில் நேற்று பணியில் இருந்த உதவி பொறியாளர் ஒருவரின் இ-மெயிலுக்கு அனல்மின் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என்பது தெரிய வந்தது. சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருவதால் பெரிய அளவிலான சிமினியில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அனல் மின்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.