கார் ரேஸில் பங்கேற்கும்போது சினிமாவில் நடிக்க மாட்டேன்: அஜித் குமார் பேட்டி

சென்னை: சமீபத்தில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் அஜித் குமார் நடித்திருந்தார். இதில் ‘குட் பேட் அக்லி’ படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமாருக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு சார்பில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து அஜித் குமார் பெற்றார். இந்நிலையில் அஜித் குமார் அளித்துள்ள பேட்டி வருமாறு: சில வருடங்களுக்கு முன்பு நான் உடல் எடை கூடி பருமனாக இருந்தேன். இப்போது கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொள்தற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். 2024 ஆகஸ்ட் முதல் இப்போது வரை, கடந்த 8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்துள்ளேன்.

உணவு கட்டுப்பாடு, நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் உள்பட பல்வேறு உடற்பயிற்சிகளின் மூலம் இது சாத்தியமானது. இப்போது நான் டீடோட்டலர் மற்றும் சைவ உணவுக்கு மாறிவிட்டேன். கார் ரேஸுக்கான முழு உடல் தகுதியுடன் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறேன். திரைப்படம், கார் ரேஸ் என்று கவனம் செலுத்தி வருவதால், இனிமேல் கார் ரேஸ் இருக்கும்போது சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். படத்தில் நடிக்கும்போது கார் ரேஸில் பங்கேற்க மாட்டேன். வரும் நவம்பர் மாதம் எனது புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என்றார்.

The post கார் ரேஸில் பங்கேற்கும்போது சினிமாவில் நடிக்க மாட்டேன்: அஜித் குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: