போச்சம்பள்ளி, மே 17: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி போலீசார் சிப்காட் பகுதியில், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 10 வயதுள்ள ஒரு சிறுவன் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்ததை பார்த்த போலீசார், சிறுவனை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த சிறுவன் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும், நண்பர்களுடன் லாரி மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்த போது, லாரி திடீரென புறப்பட்டு ஓசூரில் இருந்து சிப்காட் வந்ததும், பின்னர், அங்கிருந்து எங்கு செல்வது என தெரியாமல் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இது குறித்து ஓசூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுவனுக்கு உணவு மற்றும் பிஸ்கட் கொடுத்து, கார் மூலம் ஓசூருக்கு பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். தனியாக சுற்றித்திரிந்த சிறுவனை மீட்டு கார் மூலம் அனுப்பி வைத்து, பெற்றோரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் நாகலட்சுமியை பொதுமக்கள் பாராட்டினர்.
The post ஓசூர் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.