மண் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி, மே 16: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை இணை இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், கடந்த 13ம் இரவு போலுப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள அரசு புறம்போக்கு இடத்தில், மர்ம நபர்கள் டிராக்டர் மூலம் மண் வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து, அங்கிருந்த பொக்லைன் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குருபரப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

The post மண் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: