பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் 100 கல்லறைகள் உடைப்பு

லாகூர்: பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. அங்குள்ள குஷாப் மாவட்டத்தில் அகமதியாக்களுக்கு எதிராக தெஹ்ரீக் இ லெப்பைக் பாகிஸ்தான் என்று மதவாத கட்சி வன்முறையை தூண்டிவருகிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அகமதியாக்களின் கல்லறை தோட்டத்துக்குள் சில நாட்களுக்கு முன் புகுந்த அக்கட்சியினர், அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக போலீசில் அகமதியாக்கள் புகார் செய்துள்ளனர். இது பற்றி அமதியா சமூகத்தின் செய்தி தொடர்பாளர் அமீர் மெகமூத் லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘குஷாப் மாவட்டத்தில் உள்ள எங்கள் சமூகத்தினரின் கல்லறைகளை நாங்களே உடைக்க வேண்டும் என்று போலீசார் மிரட்டி வந்தனர். அதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம். இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் உடைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

The post பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் 100 கல்லறைகள் உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: