பெரம்பலூரில் ரூ.93,248க்கு எள் ஏலம்

பெரம்பலூர்,மே 14: பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் தினசரி மறைமுக ஏலத்திற்கு விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருட்களைக் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்றுப் பயனடையலாம் என பெரம்பலூர் விற்பனை குழு செயலாளர் சந்திரமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் வடக்கு மாதிரி சாலையில் புறவழிச்சாலை பகுதியில் இயங்கி வரும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளான மருவத்தூர், வடக்கு மாதவி, நெய்குப்பை, அனுக்கூர், எசனை பகுதிகளில் உள்ள விவசாயிகள் கொண்டு வந்த ஒரு டன் எடையுள்ள எள், பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விற்பனைக் குழு செயலாளர் சந்திரமோகன் தலைமையில், விற்பனை கூட கண்காணிப்பாளர் (கூடுதல் பொறுப்பு) மகாராஜன் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக ஏலம் நடந்தது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.102 விதம் ரூ.93,248க்கு விற்பனை செய்து தரப்பட்டது.

எனவே, பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் தினசரி மறைமுக ஏலத்திற்கு விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருட்களைக் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்றுப் பயனடைமாறு பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சந்திர மோகன் வெளிள்ளிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post பெரம்பலூரில் ரூ.93,248க்கு எள் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: