இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர், கண்டக்டரை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் சுப்புலட்சுமி இன்று கூறுகையில் பஸ் விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். 4 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பஸ் டிரைவர், கண்டக்டர், உரிமையாளரிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் கூறுகையில், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி டிரைவர், கண்டக்டர் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post அணைக்கட்டு அருகே மரத்தில் பஸ் மோதி 22பேர் காயம் appeared first on Dinakaran.