அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி,\\” இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக அவதூறு தெரிவித்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது. மேலும் இது அவதூறு கருத்தை தாண்டி உச்ச நீதிமன்றத்தின் மீது வெறுப்பை உமிழ்வதாக தான் பார்க்க முடியும். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறியதில்,\\” இதுபோன்று தொடர்ச்சியான அவதூறு விமர்சனங்கள் முன்வைப்பதை ஏற்கவோ அல்லது அனுமதிக்கவோ கண்டிப்பாக முடியாது. இருப்பினும் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கங்களுடன் கூடிய ஒரு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
The post அவதூறு விமர்சனங்களை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டம் appeared first on Dinakaran.