18ம் தேதி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி கோட்டயம் அருகே உள்ள குமரகத்தில் தங்க திட்டமிட்டு உள்ளார். மறுநாள் 19ம் தேதி ஜனாதிபதி சபரிமலையில் தரிசனம் செய்வார் என்று தெரிகிறது என திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார். இதை முன்னிட்டு வரும் 18, 19 ஆகிய தேதிகளில் சபரிமலையில் சாதாரண பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சபரிமலையில் தரிசனம் செய்யும் முதல் ஜனாதிபதி திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post ஜனாதிபதி முர்மு 19ம்தேதி சபரிமலையில் தரிசனம் appeared first on Dinakaran.