பாலக்காடு அருகே மாட்டு மந்தையை சேர்ந்த பெண் அஞ்சு (26), இவரின் குழந்தை ஸ்ரீஜன் (2) மற்றும் இவரது தோழி ஆகியோர் பாலக்காட்டில் இருந்து ஒத்தப்பாலம் லக்கிடி பகுதியிலுள்ள பழமை வாய்ந்த பாரம்பரிய வீட்டை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் நேற்று சென்றுள்ளனர்.
அப்போது பாலக்காடு ஒத்தப்பாலம் சாலையில் கல்லேக்காடு பகுதியில் அஞ்சு ஓட்டி சென்ற ஸ்கூட்டர் நிலைதடுமாறி சாலையோரம் அடுக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் மீது மோதி நின்றது. இதில் அஞ்சு மற்றும் அவரது மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
இந்த விபத்தை பார்த்த ஊர் மக்கள் இவர்களை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்காடு டவுன் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குடிநீர் குழாய்கள் மீது ஸ்கூட்டர் மோதியதில் தாய், குழந்தை பலி appeared first on Dinakaran.