கோடியக்கரை கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

நாகை: நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி வருகிறது. இந்நிலையில், நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், மருதூர் கிராமங்களைச் சேர்ந்த 14 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 4 மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெவ்வேறு இடங்களில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலானது மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post கோடியக்கரை கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! appeared first on Dinakaran.

Related Stories: