உச்ச நீதிமன்ற உத்தரவால் பாக்.கிற்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிய 6 பேர் குடும்பம்

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பலர் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் பெங்களூருவில் வசிக்கும் அகமது தாரெக் பட் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குடும்பம் நாடு கடத்தல் பிரச்னையை எதிர்கொண்டது. அவர்களது மகன் பெங்களூருவில் பணிபுரிகிறார். அவர்கள் நாடு கடத்தலை தவிர்க்க உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.

கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இந்தப் பிரச்சினை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் உள்ளது. விசா காலாவதியானதாகக் கூறப்படும் ஆறு பேரின் அடையாள ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது போன்ற கட்டாய நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம். ஆவண சரிபார்ப்பு உத்தரவால் பாதிக்கப்பட்டால், அவர்கள் ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’எனத் தெரிவித்துள்ளது.

The post உச்ச நீதிமன்ற உத்தரவால் பாக்.கிற்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிய 6 பேர் குடும்பம் appeared first on Dinakaran.

Related Stories: