கார் கவிழ்ந்த விபத்தில் மஞ்சுநாத் தந்தை கரிகவுடா (60), அவருடைய அக்கா மகன் நூதன் (வயது 6) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த மஞ்சுநாத், அவரது அக்கா மற்றும் அவரது தாய் ஆகியோரை மீட்டு அம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து அதிவேகமாக காரை ஒட்டி சென்றதே காரணம் என சந்திரகிரி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்ற போது சோகம்.. திருப்பதி அருகே சாலையில் கவிழ்ந்த கார்: 2 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.