பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் காந்தி கோரிக்கை

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த கான்பூரை சேர்ந்த சுபம் திவேதியின் குடும்பத்தினரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் நான் பங்கெடுக்கிறேன்.

இதில் கொல்லப்பட்டவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற அவர்களுடைய குடும்பத்தினரின் கோரிக்கையை ஆதரிக்கிறேன். கான்பூரை சேர்ந்த சுபம் திவேதியின் குடும்பத்தினர் சுபம் திவேதிக்கு தியாகி அந்தஸ்து வழங்குவதற்கு பிரதமர் மோடியை வலியுறுத்துமாறு என்னிடம் கேட்டு கொண்டனர். தங்களுடைய மகன் கொல்லப்பட்டுள்ளார். எனவே அவருக்கு தியாகி அந்தஸ்து வழங்கி மதிப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டனர்.பஹல்காம் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கி அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமரை கேட்டு கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்,

 

The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் காந்தி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: