பாவேந்தர் பாரதிதாசன் 135வது பிறந்தநாளையொட்டி‘தமிழ் வார விழா’ கொண்டாட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த மாதம் 22ம் தேதி பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ‘தமிழ் வார விழா’ கொண்டாடப்படும் என அறிவித்தார். பாவேந்தர் பாரதிதாசனில் பிறந்தநாள் தமிழ் வார விழாவாக கொண்டாடுவது தொடர்பில், முதல்நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (29ம் தேதி) அடையாறு, முத்தமிழ் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விழா பேருரையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையுரையும் ஆற்றினார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று (30ம் தேதி) திருவல்லிகேணியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லத்தில் கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் பாவேந்தர் பாரதிதாசன் என்ற தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. இந்த பாட்டரங்கில் தமிழின் புதல்வர் என்ற தலைப்பில் கவிஞர் அருண்பாரதியும், பாரதியின் சீடர் என்ற தலைப்பில் கவிஞர் ராசி.அழகப்பனும், பெரியாரின் தொண்டர் என்ற தலைப்பில் கவிதாயினி ஆண்டாள் பிரியதர்சினியும், அண்ணாவின் நண்பர் என்ற தலைப்பில் கவிஞர் சொற்கோ கருணாநிதி, கலைஞரின் ஆசிரியர் என்ற தலைப்பில் கவிஞர் தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை பாடினர்.

The post பாவேந்தர் பாரதிதாசன் 135வது பிறந்தநாளையொட்டி‘தமிழ் வார விழா’ கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: