இதற்கிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று இணையும் பகுதி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் மே 4ம் தேதி வரையில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 5 மற்றும் 6ம் தேதிகளில் லேசான மழை பெய்யும். வெப்பநிலையை பொருத்தவரையில் மே 2ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரும் வாய்ப்புள்ளது. 3, 4ம் தேதிகளில் வெப்பநிலை சற்று குறையும்.
The post வேலூரில் 105 டிகிரி வெயில் சுட்டது: மே 2 வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.