வரும் மே 14 அன்று பி.ஆர்.கவாய் இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக முறைப்படி பதவியேற்பார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார். பி.ஆர். கவாய் சுமார் 6 மாதங்கள் மட்டுமே இந்திய தலைமை நீதிபதியாக இருப்பார். அவர் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்த பி.ஆர். கவாய், கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் இரண்டாவது தலித் என்ற பெருமையை பெறுகிறார்.
The post உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு, மே 14ல் பதவி ஏற்கிறார் appeared first on Dinakaran.