உபியில் மின்தடை ஏடிஎம்மில் தஞ்சம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. முன்அறிவிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் மின்தடை செய்யப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜான்சி பகுதியில் வசித்து வரும் ஜெயந்தி குஷ்வாஹா என்ற பெண் தனது 3 மகன்களுடன் மின்தடை நேரத்தில் ஏடிஎம்மில் தஞ்சம் புகுந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறும்போது,’ உபி முழுவதும் மின்தடை பிரச்னை உள்ளது. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்றே தெரியவில்லை. எந்த முறையான தகவலும் தெரிவிப்பதில்லை. அதனால் நாங்கள் ஏடிஎம்மில் தஞ்சம் அடைந்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

The post உபியில் மின்தடை ஏடிஎம்மில் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: