இந்தியா-அமெரிக்கா இடையே ஜூலை 8ம் தேதிக்குள் இடைக்கால ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8ம் தேதிக்குள் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரியை விதிப்பதாக அறிவித்தார். ஆனாலும் இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு, அதாவது வரும் ஜூலை 9ம் தேதி வரையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பரஸ்பர வரியை தவிர்க்க அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயில் இந்த வார தொடக்கத்தில் அமெரிக்கா சென்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் 4 நாள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடந்து வருகின்றன. வரும் ஜூலை 8ம் தேதிக்குள் இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க முயற்சித்து வருகிறோம். இதில் 26 சதவீத கூடுதல் வரியும், 10 சதவீத அடிப்படை வரியும் இந்தியாவுக்கு இருக்கக் கூடாது என்பதை நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன’’ என்றார்.

The post இந்தியா-அமெரிக்கா இடையே ஜூலை 8ம் தேதிக்குள் இடைக்கால ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: