கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டபடி மே 13ல் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி மே 13-ல் தீர்ப்பு என அறிவித்திருந்தார். பொள்ளாச்சி வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளார். நீதிபதி மாற்றத்தால் இந்த வழக்கில் அறிவித்தபடி தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அரசாணை பிறப்பித்த பிறகே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி அந்த பொறுப்பை ஏற்க முடியும். பணியிட மாற்ற நடைமுறைக்கு சிறிது காலமாகும் என்பதால் அறிவித்தப்படி தீர்ப்பளிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
The post பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டபடி மே 13ல் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் appeared first on Dinakaran.