இந்த நிதியின் மூலம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணிகள், கடந்த ஆண்டு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன்படி அங்கிருந்த சேதமடைந்த ஓடுதளம் முழுவதும் அகற்றப்பட்டது. பின்னர் இந்த ஓடுதளம் இருந்த பகுதியை சுற்றிலும் மழை நீர் வடிகால் வசதிக்கான குழாய்கள் பதிக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் மையப்பகுதியில் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டது.
இந்த மைதானத்தில் இருந்த மண் ஒரு அடி ஆழத்திற்கு தோண்டி அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே ஓடுதளத்தில் மண்ணை அகற்றிய இடத்தில் உருவான பள்ளத்தில் ‘வெட்மிக்ஸ்’ எனும் கலவை கொண்டு தளம் அமைக்கப்பட்டது. பின்னர் அதன் மேல் தார்ரோடு போன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதன்மேல் பரப்பில் கறுப்பு நிற ரப்பர் உருக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் பாலை எடுத்து தளம் அமைக்கப்பட்டது. இதற்கு மேல் சிவப்பு நிற ரப்பர் உருக்கப்பட்டு கிடைக்கும் பாலினை ஊற்றி ஓடுதளம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் புதிய சிந்தடிக் ஓடுதளம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. இதன்படி வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த சிவப்பு நிற ரப்பரை உருக்கி, மேல் பகுதியில் ஊற்றி ஒரே அளவில் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஓடுதளத்தின் முக்கிய பணிக்காக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற ரப்பர் மூலப்பொருள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டு சிந்தடிக் ஓடுதளத்தின் மேல்பகுதியை அமைத்துள்ளதால், இது பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும்’’ என்றனர்.
The post மேல் பகுதியில் வெளிநாட்டு ரப்பருடன் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவீன சிந்தடிக் ஓடுதளம் அமைப்பு: பல்லாண்டுகள் உழைக்கும் என தகவல் appeared first on Dinakaran.