புதிய மாடல் ஆப்பிள் ஐபோன் அறிமுகமாவதற்கு முன், டாடா நிறுவன உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டு விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் தற்போது ஐபோன் கேஸிங் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க டாடா தீவிரம் காட்டி வருகிறது. செப்.-ல் ஒசூர் ஆலை தீ விபத்தால், டாடா எலக்ட்ரானிக்ஸின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டம் தாமதமானது. அமெரிக்காவுக்கான ஐபோன் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவே இனி இருக்கும் என்று ஆப்பிள் சி.இ.ஓ. டிம்குக் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆப்பிள் சி.இ.ஓ. டிம்குக் அறிவிப்புக்கு ஏற்ப, ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க இந்திய நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
The post ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை செய்யும் தலைநகராக மாறி வருகிறது தமிழ்நாடு!! appeared first on Dinakaran.