வேலூர், மார்ச் 25: வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆர்என்ஆர் ரக நெல் ரூ.1,810க்கு விற்பனையானது. வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம்பட்டு, பென்னாத்தூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அவைகளை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து பணத்தை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மட்டும் விற்பனை கூடத்திற்கு அதிகபட்சமாக ஆர்என்ஆர் ரக நெல் ரூ.1,810க்கு, குறைந்த பட்ச விலை ரூ.1,357க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஏடிடி-37 ரக நெல் ரூ.1371-1505க்கும், ஏடிடி 57 ரக நெல் ரூ.1397-1400க்கும், மகேந்திரா 606 ரூ.1,409-1,670க்கும், நர்மதா ரூ.1,419-1,750, அமோகா ரூ.1,703க்கும், ரூ.1,621க்கும், காவேரி ரூ.1,510க்கும், பூமிகா ரூ.1,609க்கும், சுவேதா ரூ.1,529-1,609க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், தேங்காய் கிலோவிற்கு ரூ.140.85 முதல் ரூ.181.30க்கும், மணிலா 80 கிலோ ரூ.6,568-8,122க்கு, கொள்ளு 100 கிலோ ரூ.3,458க்கும், உளுந்து 100 கிலோ ரூ.6,238- ரூ.6,859க்கும், கேழ்வரகு ரூ.3,888-4,338க்கு, சோளம் 100 கிலோ ரூ.4,320க்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பழனி தெரிவித்தார்.
The post ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆர்என்ஆர் ரக நெல் ரூ.1,810க்கு விற்பனை வேலூர் டோல்கேட் appeared first on Dinakaran.