மாமரங்களை சேதப்படுத்தி ஒற்றை யானை அட்டகாசம்

பேரணாம்பட்டு, ஏப்.30: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி கிராமத்தை சேர்ந்த மத்தியோ, ஜெயபால் ஆகியோரின் விவசாய நிலத்தில் ஒற்றை காட்டு யானை நேற்று அதிகாலை புகுந்து மாமரங்களின் கிளைகளை உடைத்தும், அதில் இருந்த மாங்காய்களையும், வாழை செடிகளை பிடுங்கி எறிந்து சாப்பிட்டும் சேதப்படுத்திக்கொண்டிருந்தது. இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கத்தி கூச்சலிட்டு பானங்கள் விட்டு வெடித்தும், மேள தாளங்கள் அடித்து, பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தம் ஏந்தி ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து நேற்று வனத்துறையினர் காட்டு யானையால் சேதமடைந்த விவசாய நிலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: