கரூர், மார்ச். 9: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழநாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் முத்துமாரி தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் துணைக் குழு உறுப்பினர் தமிழ்மணீ வரவேற்றார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் சிவகாமி, கால்நடை ஆய்வாளர் சங்க லட்சுமி,
அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுமதி மற்றும் நிர்வாகிகள் அமுதா, ஜமுனா ராணி, சங்கீதா உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.அரசு ஊழியர் சமூதாயத்தில் பங்கு என்ற தலைப்பில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி கலந்து கொண்டு மகளிர் தின விழா குறித்து பேசினார். மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் காயத்ரி நன்றி கூறினார்.இந்த நிகழ்வில், மகளிர் தின விழா சிறப்புகள், பெண்களின் உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
